Wednesday, June 28, 2006

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்

தன்னைப்போன்ற இளம்பெண்களுக்கு, காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் வழிவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணம், இல்வாழ்க்கை போன்றனவற்றுக்கு ஒரு மாற்றுவழி கோலியது என்று உஷா மேத்தா சொல்லுகிறார்.

"என் தந்தை ஒரு முற்போக்காளர். எனவே, நான் எப்படியும் கல்லூரிக்கு சென்று ஒரு பல்கலைகல்வி கற்றிருக்கலாம். ஆனால் எங்களது மரபுவழி குடும்பம் என்பதால் திருமணம் செய்துகொண்டு, இல்வாழ்வில் அமர்த்திவிட என்னை வற்புறுத்தி இருக்கலாம். ஆனால் போராட்டத்தில் உள்ள என் ஈடுபாட்டால் நான் 1942 இல் சிறைக்கு சென்றது மட்டுமன்றி எனக்கென ஒரு தொழில்துறையையும் நாடிக்கொண்டேன். இவ்வாறுதான் காந்தி தம் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள பெண்களை வழிநடத்தினார்."

காங்கிரசின் இடதுசாரிகள் காந்தியின் அறப்போர் கோட்பாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அரசின் வன்முறையை ஈடுகட்ட வன்முறை புரட்சிதான் வழி என்று சொல்லாடிய பலரும், வெள்ளையர்மேல் இனவெறுப்பை ஏற்காததில் காந்தியோடு இணங்கினோம். நிகழ்ச்சி காட்டாக, 1940 இல் தலைமறைவான பிரித்தானிய எதிர்ப்பு வன்முறை போராட்டத்தை வழிநடத்திய அருணா அசிப் அலி, அவளைப் போன்றோருக்கு, அகதா கிருஸ்டியை படிப்பதுதான் தம் பிடித்தமான படுக்கைநேர கதை என்னும் அளவுக்கு பிரித்தானிய நாகரிகத்தில் ஊறியவர் என்று ஒத்துக்கொள்கிறார்.

" நாங்கள் வெகுண்டோம். ஏதோ ஒன்று எம்மை வெகுளச்செய்தது. அது நம்மை இழிவு செய்யும் உணர்வு. இருந்தும் அங்கே வெறுப்பு இல்லை. ஏனென்றால் நம் கல்வியால் பிரித்தானிய நாகரிகத்துக்கு நாம் இசைந்து விட்டோம். எல்லா தலைமையாளர்களும், காந்தி, நேரு உட்பட, இளமைக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர்கள். பிரித்தானிய எண்ணங்களும், பி்ரித்தானிய , எனவே ஐரோப்பிய, புரட்சி தோதுகளும் அவருள் தாக்கம் ஏற்படுத்தின. நான் பிரெஞ்சு புரட்சியை பற்றி கிளர்ச்சி ஊட்டும் நூல்கள் எல்லாம் பெருவாரியாக படித்தேன். பிரெஞ்சு புரட்சியிலும், கிராம்வெல் காலத்திலும், அதை தொடர்ந்தும் நடந்த பிரித்தானிய போராட்டங்களிலும், அவரவர் வழியில் கொடுங்கோன்மை அவர்கள் எதிர்த்தார்கள் என்றால் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவேதான் நம் தலைவர்கள் பிரித்தானியர்களை, " நீங்கள் இதையெல்லாம் எப்படி எங்களுக்கு செய்யலாம். இவையெல்லாம் உங்கள் அடிப்படை பண்புகளுக்கு எதிரானவை அல்லவா?" என்று வினவுவார்கள். எங்களிடம் வெறுப்பு இல்லை. சொல்லப்போனால், அவர்களது பண்புகள்தானே எம்மை புரட்சி செய்யும்படி செய்தன"

(வழிவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட= conventional; மரபுவழி = traditional; இசைந்து = tuned; இழிவு செய்யும் உணர்வு. = humiliation; புரட்சி தோதுகளும revolutionary ideas)

4 Comments:

Sivabalan said...

செல்வன்

நல்ல பதிவு!!

நன்றி!

Unknown said...

yours is the first commnt.thanks sivabalan

நரியா said...

வணக்கம் செல்வன்.

எனக்கு இந்த கட்டுரை சரியாகப் புரியவில்லை. இன்னும் சில முறை படித்து பார்க்கிறேன்.

மீண்டும் வருகிறேன்.

நன்றி!

Unknown said...

வணக்கம் நாரியா

அந்த கட்டுரை என் நண்பர் வேந்தன் அரசு எழுதியது.முழு கட்டுரையை இடவில்லை.ஏனேனில் அவர் அதை தொடராக் எழுதிக்கொண்டிருக்கிறார்.

Thanks
selvan